search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோ கபடி லீக்"

    • இத்தொடரில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.

    முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

    புனே அணி கேப்டன் அஸ்லம் மிக மதிப்புமிக்க வீரராக தேர்வு பெற்றார். அவர் 142 ரைடு புள்ளிகளும், 23 டேக்கிள் புள்ளிகளும் பெற்றார். அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது.

    இந்தத் தொடரில் அதிக ரைடு புள்ளிகளை டெல்லி கேப்டன் அகமாலிக் பெற்றார். அவர் மொத்தம் 228 புள்ளிகளை எடுத்தார். சிறந்த ரைடராக தேர்வு பெற்ற அகமாலிக்குக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைத்தது.

    வீரர்களை மடக்கி பிடிப்பதில் சிறந்த வீரராக புனே வீரர் முகமது ரேசா தேர்வு பெற்றார். அவர் 97 புள்ளிகள் பெற்றார். அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது.

    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
    • இதில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

    தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    • லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
    • 3 முதல் 6-வது இடங்களை பெற்ற தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. 3 முதல் 6-வது இடங்களை பெற்ற தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஐதராபாத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டங்களில் தபாங் டெல்லி- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    • இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது.
    • அரைஇறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் 12 வாரங்களாக நடைபெற்றது. 132 லீக் போட்டிகள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றன.

    புனேரி பல்தான் (96 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92), தபாங் டெல்லி (79), குஜராத் ஜெய்ண்ட்ஸ் (70), அரியானா ஸ்டிலர்ஸ் (70), பாட்னா பைரேட்ஸ் (69) ஆகிய அணிகள் முறையே முதல் 6 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் 2 இடத்தை பிடித்த புனே, ஜெய்ப்பூர் நேரடியாக அரையிறுதியில் விளையாடும்.

    பெங்கால் வாரியர்ஸ் (55 புள்ளிகள்), பெங்களூரு புல்ஸ் (53), தமிழ் தலைவாஸ் (51), யு மும்பா (45), உ.பி. யோத்தாஸ் (31), தெலுங்கு டைட்டன்ஸ் (21) ஆகியவை முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி-ஆறாவது இடத்தை பிடித்த பாட்னா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் புனேயுடன் மோதும்.

    இரு அணிகளும் மோதிய ஒரு ஆட்டம் 39-39 என்ற கணக்கில் 'டை'ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 38-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த குஜராத்-ஐந்தாம் இடத்தை பிடித்த அரியானா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் ஜெய்ப்பூர் அணியுடன் விளையாடும்.

    இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அரை இறுதியில் நுழைய 4 அணிகளும் கடுமையாக போராடும். இதனால் எலிமினேட்டர் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.

    அரைஇறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.

    • புனே அணி உ.பி.யை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.
    • பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    பஞ்ச்குலா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி அகமதா பாத்தில் தொங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்று தற்போது 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 129 ஆட்டங்கள் முடிந்தன.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ், அரியானா ஸ்ட்லர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், உ.பி. யோதாஸ், யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

    புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 6 வெற்றி, 13 தோல்வி, 2 டையுடன் 42 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் 2 வெற்றி, 19 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை முடிக்கும் ஆர்வத்தில் உள்ளன.

    நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் புனே-உ.பி. (இரவு 8 மணி), அரியானா-பெங்களூரு (இரவு 9 மணி), அணிகள் மோதுகின்றன.

    புனே அணி உ.பி.யை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. உ.பி. அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அரியானா அணி பெங்களூரை வீழ்த்தி 4-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. அன்று எலி மினேட்டர் ஆட்டங்களும், 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்களும், மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

    ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளான டெல்லி, குஜராத், அரியானா, பாட்னா ஆகியவை எலி மினேட்டரில் ஆடுகின்றன.

    • 126-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
    • இந்த ஆட்டத்தில் மொத்தம் 111 புள்ளிகள் எடுக்கப்பட்டது.

    பஞ்ச்குலா:

    10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் நேற்று நடந்த 126-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் 74-37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்த அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் நிறைவு செய்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டத்தில் 9 வெற்றி, 13 தோல்வியுடன் 51 புள்ளிகளை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 74 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம் புதிய சாதனை படைத்தது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் 70 புள்ளிகள் பெற்ற முதல் அணி தமிழ் தலைவாஸ் ஆகும். இதற்கு முன்பு பாட்னா அணி பெங்காலுக்கு எதிராக 69 புள்ளிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.

    மேலும் இந்த ஆட்டத்தில் மொத்தம் 111 புள்ளிகள் எடுக்கப்பட்டது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு பாட்னா-பெங்கால் மோதிய ஆட்டத்தில் 110 புள்ளிகள் எடுக்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் அணி 6 முறை பெங்காலை ஆல் ஆவுட் செய்தது. இதுவும் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் 5 முறை ஆல் அவுட் செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. இன்னும் 5 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. வருகிற 26-ந்தேதி 'பிளே ஆப்' சுற்று தொடங்குகிறது.

    • 10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
    • முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.

    கொல்கத்தா:

    10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பல்தான் (81 புள்ளி), தபாங் டெல்லி (69 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (65 புள்ளி) ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ், யு மும்பா, உ.பி.யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் வாய்ப்பை இழந்தன.

    பிளே ஆப் சுற்றில் நுழைய எஞ்சிய 2 இடத்துக்கு பாட்னா பைரேட்ஸ் (63 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (60 புள்ளி), பெங்கால் வாரியர்ஸ் (54 புள்ளி) ஆகிய 3 அணிகள் போட்டியில் உள்ளன.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 119-வது 'லீக்' ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 வெற்றி, 7 தோல்வி, 3 டையுடன் இருக்கும் பாட்னா அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி ஏற்கனவே 50-28 என்று கணக்கில் அந்த அணியை வீழ்த்தி இருந்தது. தெலுங்கு டைட்டன்ஸ் பதிலடி கொடுத்து 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.

    • குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி. யோதாஸ் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது கட்ட ஆட்டங்கள் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 27-22 என்ற கணக்கில் டெல்லியை வீழ்த்தி 13-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் புனே 40-31 என்ற கணக்கில் பெங்களூரை தோற்கடித்தது.

    இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பெங்கால் 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி. யோதாஸ் மோதுகின்றன. அரியானா 11-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    ஜெய்ப்பூர், புனே அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதாஸ் வாய்ப்பை இழந்துவிட்டன.

    • குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்'போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18 ஆட்டத்தில் 2 வெற்றி, 16 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 7 வெற்றி, 10 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் அணி 18-வது போட்டியில் குஜராத் ஜெயின்ட்சை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணியிடம் ஏற்கனவே சென்னையில் நடந்த ஆட்டத்தில் 30-33 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதற்கு தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றியை பெற்றது. கடந்த ஆட்டத்தில் ஜெய்பூரிடம் தோற்றது. அந்த அணி மீண்டும் எழுச்சி பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர், அஜிங்கயா பவார், ஹிமான்சு, சாஹர், அபிஷேக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் 6 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 43 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. மும்பை அணியும் 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 40 புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.

    • ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது.
    • குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளன.

    12 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 ஆட்டத்தில் 15 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியாஸ் 45-38 என்ற கணக்கில் டெல்லி அணியையும், அரியானா ஸ்டீலர்ஸ் 34-30 என்ற கணக்கில் குஜராத்தையும் தோற்கடித்தது.

    10-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் உ.பி. யோதா-மும்பை அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 6 வெற்றி, 8 தோல்வி, 2 டையுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. உ.பி. யோதா 3 வெற்றி, 12 தோல்வி, 1 டையுடன் 23 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி தெலுங்கு டைட்டன்ஸ்சை வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி 10 வெற்றி, 5 தோல்வி, 2 டையுடன் 60 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    புனே அணி 68 புள்ளியு டன் 2-வது இடத்திலும், அரியானா 55 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பாட்னா 53 புள்ளியுடன் 5-வது இடத்திலும், குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    • 100-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.
    • இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 100-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.

    டெல்லி அணி 16 ஆட்டத்தில் 10 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 59 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை டெல்லி நெருங்கும். பெங்கால் அணி 16 ஆட்டத்தில் 6 வெற்றி, 8 தோல்வி, 2 டிராவுடன் 39 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நெய்டா, மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றது.

    7-வது கட்ட போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 36-34 என்ற கணக்கில் புனேரி பல்தானையும், பெங்கால் வாரியர்ஸ் 42-37 என்ற கணக்கில் உ.பி. யோதாவையும் தோற்கடித்தன.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி தனது 12-வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு இந்த அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த அணி டெல்லி (42-31), தெலுங்கு டைட்டன்ஸ் (38-36), உ.பி.யோதா (46-27) ஆகியவற்றை தோற் கடித்து இருந்தது.

    பெங்கால் வாரியர்ஸ், மும்பை, பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர், அரியானா, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனே ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. அரியானா அணி தமிழ் தலைவாசை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 8-வது வெற்றிக்காகவும், பாட்னா 6-வது வெற்றிக் காகவும் காத்திருக்கின்றன. இதுவரை 70 ஆட்டங்கள் முடிந்துள்ளன. புனே அணி 10 வெற்றி, 2 தோல்வியுடன் 52 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் 48 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெல்லி 40 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குஜராத் 39 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மும்பை 35 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், அரியானா 34 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    பெங்கால், பெங்களூரு, பாட்னா, உ.பி. யோதா, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 7 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

    ×